பள்ளிகளில் கல்லூரிகள் துவக்க பல்கலை.க்குத் தடை
சென்னை:
திருநெல்வேலியில் உயர்நிலைப்பள்ளிகளில் பி.காம், பி.எஸ்.சி. வகுப்புக்களைத் துவக்குவது தொடர்பான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகசிண்டிகேட்டின் தீர்மானத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நெல்லையில் உள்ள சில உயர்நிலைப்பள்ளிகளில் பி.காம்., பி.எஸ்.சி.வகுப்புக்களைத் துவக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட்தீர்மானித்திருந்தது. இதற்கு மனோ கல்லூரி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டிருந்தது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பெறாத கல்லூரிகளின் சங்கம் சார்பில் இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் மனுச் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், பள்ளிகளில் கல்லூரிகளுக்குத் தேவையான நூலகம், மற்றும் கம்ப்யூட்டர்கள் வைப்பதற்கானஏ.சி.அறைகள் இல்லை. மேலும் பாடம் எடுப்பதற்கான ஆசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளிகளில் பி.காம் மற்றும்பி.எஸ்.சி.வகுப்புக்கள் தொடங்குவது இயலாத காரியம் என்று பல்கலைக் கழக சிண்டிகேட் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
யு.என்.ஐ.