ஜெ.வை சட்டை செய்வதே இல்லை .. கூறுகிறது பா.ஜ.க.
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொல்வதை நாங்கள் சட்டை செய்வதேஇல்லை என்று பாரதீய ஜனதாக் கட்சி பொதுச்செயலாளர் வெங்கையா நாயுடுதெரிவித்தார்.
சென்னையில் வெங்கையா நாயுடு அளித்த பேட்டி:
மேற்கு வங்காளத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஜனநாயகமும், சட்டம்ஒழுங்கும் கெட்டு விட்டது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக சென்று ஆய்வுசெய்த குழு, மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று சிபாரிசு செய்துள்ளது. அது மிகச் சரியானது.
ஜோதிபாசுவின் அரசுக்கு அந்த மாநில மக்களே எதிராக இருக்கிறார்கள். அவருடையநாட்கள் எண்ணப்படுகின்றன. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இழந்துசொந்த மண்ணிலேயே அகதிகளை போல் வாழ்கின்றனர்.
கடந்த 18 மாதங்களில் அங்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. எனவே உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கருத்து. எந்த மாதிரியானநடவடிக்கை என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அம்மாநிலஅரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
மேற்கு வங்க அரசை கலைக்க அரசு சதி செய்கிறது என்று ஜெயலலிதா கூறியிருப்பதுகண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவுக்கு அங்கே என்ன நடக்கிறது என்ற. எதுவுமேதெரியாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பது தான் அவரது வேலை.ஜெயலலிதா சொல்வதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனத்தில் வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் இடையே எந்தமோதலும் இல்லை. அதுபற்றி வெளியான செய்திகள் வெறும் வதந்தி.
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு முயற்சியில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள்சரியான வழியில் சென்று கொண்டிருக்கின்றன. இதில் கருத்து வேறுபாடு வந்துவிடாமல் கவனமாக இருந்து ராஜ்குமாரை எப்படியாவது மீட்க வேண்டும் என்றார்நாயுடு.