சிகிச்சையின்போது கோமாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை 10,000
கோவை:
விபத்து காரணமாக சிகிச்சை பெற்று, மயக்க நிலையில் இருந்து மீளாமல் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேருக்கும் மேல் இறக்கின்றனர் எனகோவை மெடிக்கல் சென்டர் சேர்மன் டாக்டர் நல்ல பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் நல்ல பழனிச்சாமி கூறியதாவது:
சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களது காயத்தின் தன்மையைப் பொறுத்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. காயமடையும் பலர் சிகிச்சையின்போது மயக்க நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும், உடல் உறுப்புகள் விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரைக் காப்பாற்ற இயலாமல் போகிறது. இவ்வாறு இந்தியாவில் ஆண்டுஒன்றிற்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளில் 80 முதல் 90 சதவீதம் பேர் முகக் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த முகக் காயங்கள், பிளாஸ்டிக்அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.
விபத்திற்கு முக்கிய காரணங்கள், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுதல், அதிவேகமாகச் செல்லுதல் ஆகியவையே. இதோடு, தமிழகம்முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
முறையான பயிற்சி பெற்ற டிரைவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். லைசென்ஸ் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகள்தான் இதற்குக் காரணமாகஅமைகிறது.
விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்க வேண்டும். இவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் விபத்துநடந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கென கோவை மெடிக்கல் சென்டர் விபத்து நடக்கும் இடத்திற்கு விரைந்து செல்லஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
கோவையில் இந்த விபத்து தொடர்பான கருத்தரங்கிற்கு கோவை மெடிக்கல் சென்டர் ஏற்பாடு செய்துள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 300டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications