கற்பழித்த பெண்ணை மணந்த வாலிபர்
சேலம்:
சேலத்தில் தான் கற்பழித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் வாலிபர். இவர் சேலம் அதிமுக இணைச்செயலாளரின் மகன்.
சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இந்தத் திருமணம் போலீஸ் நிலையத்தில் இந்தத் திருமணம் நடந்தது.
சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் பூக்கடை வைத்து நடத்தி வருபவர் சின்னப்பொண்ணு. அவர் சேலம் அதிமுக இணைச் செயலாளராக உள்ளார். இவரது மகன்துரை.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் முத்து. சின்னப்பொண்ணுவின் உறவினர். சம்பவத்தன்று முத்துவின் மகள் ஜோதிலட்சுமி (வயது 19). வீட்டில் தனியாகஇருந்தார். அப்போது மகன் துரை, ஜோதிலட்சுமியைக் கற்பழித்தார்.
இதுகுறித்து குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கூறப்பட்டது.போலீஸார் வழக்குப் பதிவு செய்து துரையைக் கைது செய்தனர். இந்த நிலையில் துரை சென்னைஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட் 90 நாட்களுக்குள் துரை, தான் கற்பழித்த ஜோதி லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு,துரையை ஜாமீனில் விடுவித்தது.
இதையடுத்து சேலம் மகளிர் காவல்நிலையத்தில் ஜோதிலட்சுமிக்கும், துரைக்கும் சனிக்கிழமை திருமணம் நடந்தது. பின்னர் திருமணம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டது.