பாதுகாப்புத் திட்டங்களில் இந்தியா-ரஷ்யா கூட்டு ஒப்பந்தம்
மாஸ்கோ:
பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளபயணத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத் திட்டங்கள் தவிர அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறுதுறைகளில் கூட்டு நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவும் ரஷ்யாவும்டி-90 டாங்குகள், மிக்-29 ரக போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல் உதிரி பாகங்கள்ஆகியவற்றை இணைந்து தயாரிக்கும்.
அக்டோபர் 10-ம் தேதி முதல் மூன்று நாட்கள் இந்தியாவின் புடின் சுற்றுப்பயணம்செய்கிறார். அவரது சுற்றுப் பயணம் குறித்து இறுதி செய்வதற்காக 3 பேர் கொண்ட ரஷ்யஉயர்மட்டக் குழு இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications