ஆசிரமத்தை சுற்றி பிணங்களை தோண்டி எடுக்கும் பணி தொடக்கம்
மதுரை:
நரபலி ஆசிரமத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகள் தோண்டப்பட்டுவருகின்றன. இந்த பிரச்னையில் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையில் நரபலி சாமியாரின் அந்தரங்க அறைகள் சோதனையிடப்பட்டபோது குவியல் குவியலாக "வயாக்ரா செக்ஸ்மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்ட மதுரை அழகாபுரி ஆசிரமத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளனவாஎன்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைதான ஆசிரவாசிகள் முன்னிலையில் பிணங்களை தோண்டிஎடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் போர்க் கொடி தூக்கினர்.
இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏராளமான பெண்களும், ஆண்களும் திரண்டுஆசிரமத்தின் முன்பு முற்றுகையிட்டனர்.
பொதுமக்களின் கோரிக்கையை போலீசார் ஏற்க மறுத்தனர். பொதுமக்களும் கலைய மறுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. உயரதிகாரிகள் சமரசத்திற்கு ஓடி வந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு இடையில் பிணங்கள் தோண்டப்படும் பணி துவங்கியுள்ளது.
இதற்கிடையில் சாமியாரின் அறைகளை சோதனையிட போலீசார் நுழைந்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த அறையை அடித்து நொறுக்கினர். போலீசார் பொதுமக்களை விரட்டி அடித்தனர்.பின்னர் சாமியாரின் அறைகள் சோதனையிடப்பட்டபோது, அந்தரங்க அறைகள் முழுவதும் வயாக்ரா மாத்திரைகள் நிரம்பிவழிந்தன. செக்ஸ்க்கு தேவையான எல்லா மருந்து மாத்திரைகள், சாதனங்களும் அங்கே இருந்தன.
அவற்றை கண்டதும் பொதுமக்கள் மேலும் ஆவேசமடைந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications