For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகிங் செய்தனர்...கம்பி எண்ணுகின்றனர்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோயம்புத்தூரில் ராக்கிங்கில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இவர்களைப் போலீசார் கைதுசெய்தனர்.

இரண்டாம் ஆண்டு மாணவர்களான இவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்துள்ளனர். இவர்கள் முதலாமாண்டு மாணவர்களை தொடர்ந்துசல்யூட் அடிக்கக் கூறியுள்ளனர்.

அத்தோடு நிற்காமல் குதித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறி வற்புறுத்தியுள்ளனர். முதலாமாண்டு மாணவர்கள் கூறிய புகாரையடுத்து, கல்லூரிநிர்வாகம் போலீசில் புகார் செய்தது.

இந்த புகாரை விசாரித்த பீளமேடு போலீசார், ராக்கிங்கில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவரைக் கைது செய்தனர். மேலும், ராக்கிங்கில்ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 மாணவர்களைத் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X