வாருங்கள் உலகை மாற்றலாம்...இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய, நீடித்த உறவை ஏற்படுத்துவதுஎன்று இந்தியப் பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இருவரும்சபதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் இரு நாடுகளும் இனி சீரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்றுஅவர்கள் தெரிவித்தனர்.
வாஜ்பாயி மேற்கொண்ட 5 நாள் அதிகாரப்பூர்வ அமெரிக்கப் பயணம் முடிவுக்குவருகிறது. இதையடுத்து வாஜ்பாயைப் கவுரப்படுத்தும் வகையில் வெள்ளைமாளிகையில் கிளின்டன் ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து அளித்தார்.
அந்த விருந்து நிகழ்ச்சியில் கிளின்டனும், வாஜ்பாயும் சந்தித்துப் பேசினர். பின்னர்இருவரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கிளின்டன் கூறியதாவது:
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய, வலுவான, நீடித்த உறவைஏற்படுத்தவேண்டும் என்று நானும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயியும் உறுதிபூண்டுள்ளோம்.
இந்தியாவின் வெற்றியைத் தனது வெற்றியாகவே அமெரிக்கா கருதுகிறது.அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டால் உலகத்தையே மாற்றிஅமைக்கலாம்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டதற்காக வாஜ்பாய்க்கும், இந்திய அரசுக்கும்,இந்திய மக்களுக்கும் நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே நல்ல உறவு உள்ளது. பல்வேறுபிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒரே மாதிரியாகவே செயல்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கையில் மேலும் முன்னேற்றம் காண நல்ல வழிகளைக்கண்டுபிடிக்கவேண்டும்.
பல வரலாற்றுக் காரணங்களால் இரு நாடுகளின் மக்கள் மனதில் பயமும், கருத்துவேறுபாடும் நிலவுகிறது. இவற்றையெல்லாம் கடந்து இரு நாட்டு மக்களும் இணைந்துசெயல்படவேண்டியது அவசியம். இல்லையென்றால் அதுவே நமது சுதந்திரத்தையும்தனித்தன்மையையும் பாதித்துவிடும் என்றார் கிளின்டன்.
வாஜ்பாய் கூறியதாவது:
எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் கிளின்டன் தெரிவித்த பாராட்டுக்கு நன்றி.அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைக்கப்பட்டதன் மூலம்அமெரிக்காவையும், பில் கிளின்டனையும் இந்திய மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், மகாத்மா காந்தியும், உட்ரோவில்சனும் தெரிவித்த கருத்துக்களும், எண்ணங்களும் எதிர்லாகத்தில் உண்மையாகும்என்பது விளங்கும். தீர்க்கதரிசனமாக இருவரும் எதிர்காலத்துக்குத் தேவையானகருத்துக்களையே கூறியுள்ளனர்.
மேலும், வரலாற்றின் சரியான பாதையில்தான் அமெரிக்காவும், இந்தியாவும்நடைபெற்று வருகின்றன என்பதும் விளங்கும். எதிர்காலத்தில் இந்தியாவும்,அமெரிக்காவும் இணைந்து செயல்படும். அதற்கான முயற்சிகளை இந்தியா நிச்சயம்மேற்கொள்ளும் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications