ராமதாஸ் மீது தாக்குதலே நடக்கவில்லை: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாக்டர் ராமதாஸ் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. சரிந்து வரும் தமது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காகவும், தமக்குள்ளவாக்கு வங்கியை காப்பாற்றவும் திட்டமிட்டு ஒரு பொய்யை பரப்பி வன்றையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் கூறினார்.

உண்மையை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்பாடு செய்யுமாறும் அவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் உண்மை இருந்தால் நான் அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், ராமதாஸ்வழக்கம் போல் பொய் பிரச்சாரம் மூலம், வன்முறை வெறியாட்டம் மூலம் தனது வாக்கு வங்கியை திரட்டும் முயற்சியில் ஈடுபடுவதுபோல் இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

அவர் மீதோ, அவரது கார் மீதோ எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. இது ஒரு அப்பட்டமான பொய்.

தலித் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் ராமதாஸ் சம்பாதித்திருக்கிறார். எனவே தேர்தல் நேரத்தில் திமுக, அதிமுக அவரைப்புறக்கணித்து விடும் என்ற அச்சத்தில் இத்தகைய வன்முறையை தூண்டி வதந்திகளை பரப்பி வருகிறார்.

நடக்காத ஒரு சம்பவத்தின் எதிர் விளைவாக இதுவரை 200 குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளன. 6 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இருவர்பலியாகியுள்ளனர்.

ராமதாசின் வன்றையால் நாடே ரணகளமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் உடனடியாக இதைத் தடுக்க வேண்டும். ராமதாஸ்செயலை ஊக்கப்படுத்தும் வகையில் முதல்வர் அறிக்கை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

சேலம் அதிமுக ஆர்ப்பாட்டம், 23ம் தேதி பெரியார் விழா, 27ம் தேதி தமாகா போராட்டம் ஆகியவற்றை நீர்த்துப் போக செய்ய வேண்டும்என்பதற்காக முதல்வர் இவ்வாறு அறிக்கை விட்டுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+