For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடுபிடிக்கும் இந்தியன் வங்கி வழக்கு: கலக்கத்தில் த.மா.கா

By Staff
Google Oneindia Tamil News

மிழக அரசியல் தலைவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அரசியல்ரீதியாகவே பார்க்கப்படுகின்றன. நிகழ்வுகள்அரசியல்ரீதியாக இருந்தாலும், அரசு ரீதியாக இருந்தாலும் சரி எல்லாமே அரசியல் கண்ணோட்டத்தோடு தான்பார்க்கப்படுகின்றன.

தற்பொழுது எழுந்திருக்கும் சர்ச்சை, த.மா.கா தலைவர் மூப்பனாரையும், தி.மு.க தலைவர் கருணாநிதியையும் பற்றியது.சமீபகாலமாக தி.மு.க தலைமைக்கு மூப்பனாரின் மீது ஒரு கண் என்கிறார்கள்.

1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் என்கிற பெயரில் புதிய கட்சி உதயமானது. மூப்பனார் தலைமையில் நாங்கள் தான்உண்மையான காங்கிரஸ் என்று கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் இயங்கி வந்த சத்யமூர்த்திபவணையும்கைபற்றினார்கள். அதன் பிறகு அன்றைய தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருக்க தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைசந்தித்தனர்.

அமோக வெற்றி. அப்போது ரஜினியின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் இருந்த மதிப்பை இரு கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டுவென்றன. (அடுத்த மக்களவைத் தேர்தலில் ரஜினியின் பிரசாரம் மண்ணைக் கவ்வியது, அதிமுக வென்றது நினைவிருக்கலாம்)

த.மா.கா பிரமுகர் ஒருவர் நம்மிடம் சொன்னார், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க காலத்திய ஊழல்கள் ஒவ்வொன்றாகதூதுதட்டி எடுத்தனர். இந்த சமயத்தில் தான், இந்தியன் வங்கியின் தலைவர் கோபாலகிருஷ்ணன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள்பதிவு செயப்பட்டது.

அப்பொழுது மத்திய அமைச்சவையில் த.மா.காவும் இடம் பெற்றிருந்தது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சர்.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தான் சி.பி.ஐயின் இணையமைச்சர். இந்த நிலையில் இந்தியன் வங்கி கடனாக பலருக்கு வழங்கிய800 கோடிரூபாய் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.

அப்பொழுதைய இந்தியன் வங்கித்தலைவர் கோபாலகிருஷ்ணன், மூப்பனாருக்கு பால்யகால நண்பர். அவருக்கு ஒரு சிக்கல்என்றால் பர்ஸனலாக தலைவரும் வருத்தப்படுவார் என்று பலருக்கும் தெரியும். மூப்பனாரின் நெருங்கிய நண்பர் மீது ஊழல்புகார் என்றால், மூப்பனாரையும் எப்படியாவது இந்தச் சிக்கலில் மாட்ட வைக்கலாம் என்று நினைத்தனர்.

தலைவரைப் பொறுத்தமட்டில், உதவி என்று வருபவர்களுக்கு தாராளமாக முடிந்தளவு உதவிகள் செய்யக் கூடியவர். பலர்வங்கியில் லோன் கேட்டு தலைவரிடம் வரும் பொழுது தலைவரும் பலருக்கு ரெக்கமெண்டேஷன் செய்து அனுப்பியிருக்கிறார்.

தலைவர் ரெக்கமென்டேஷன் செய்தவர்கள், தவிர த.மா.காவிலேயே உள்ள முக்கிய பிரகர்களுக்கும் கோபாலகிருஷ்ணன்இந்தியன் வங்கித் தலைவராக இருந்த போது கடன் பெற்றிருக்கிறார்கள். இதில் பலர் கடனை கட்டாமல் இழுத்தடித்தார்கள். இந்தகாரணத்தைக்காட்டி ஏதாவது ஒரு வகையில் மூப்பனாருக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதுதான் தி.மு.கவினரின் திட்டம்.

இந் நிலையில் தீடீரென்று எவருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு நாள் காலை கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.தலைவர் சற்று வருத்தப்பட்டார். என்னது இது எப்படி நடந்தது என்று தலைவர் வருத்தப்பட்டதற்கு காரணம், மிக நெருங்கியநண்பர் கோபாலகிருஷ்ணன். அவரை எப்படி சிறையில் பார்ப்பது. முன் கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் ஜாமீன் ஏற்பாடுகள்ஏதாவது செய்திருக்கலாமே என்பதுதான்.

வருத்தத்துடன் சற்று கோபமாகவும் இருந்தார் தலைவர். அந்த சமயம் கோவையில் இருந்த சி.பி.ஐ. இணையமைச்சர் எஸ்.ஆர்பாலசுப்பிரமணியத்தை உடனே செனைக்கு வரவழைத்தார். சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், அருணாசம் இந்த நான்குபேரையும் அவசவசமாக சென்னைக்கு வரச்சென்னார். அன்று கூட்டத்தில் மிகக் கோபமாகவே பேசினார். கோபால கிருஷ்ணன்கைது பற்றி யாருமே ஏன் முன்பாக செல்லவில்லை என்பது தான் மூப்பனாரின் கேள்வி.

இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று சற்று அலசிப்பார்க்க மூப்பனாரே அதிர்ந்து போகும்படி பல விஷயங்கள் தெரியவந்தன.800 கோடிரூபாய் கடன்-ஊழல் வழக்கில் த.மா.கா பிரமுகர்களுக்கு தொடர்புள்ளது. கோபாலகிருஷ்ணன் மீது வழக்கைதீவிரமாக்கினால் த.மா.காவில் உள்ள பல மிக முக்கிய பிரகர்களும் சிக்கிக்கொள்வார்கள்.

அப்படிச் செய்து மூப்பனாரை சற்று அடக்கிவைப்பது தான் நல்லது என்று தி.மு.க தரப்பில் நினைத்துத்தான் கோபாலகிருஷ்ணனைகைது செய்ய வைத்தார்கள். மிக வேகமாக வளர்ந்து வரும் த.மா.கா மற்றும் தனக்கு வைக்கப்பட்ட செக் இது. இதை நன்றாகப்புரிந்து கொண்டார் மூப்பனார்.

அது மட்டுமல்ல கோபாலகிருஷ்ணன் மாட்டிக்கொண்டால் மூப்பனாரும் விசரணைக்கு உட்படுவார் என்றே சில அரசியல்ராஜதந்திர பிரமுகர்கள் கணக்கு போட்டனர். இந்த விஷயத்தில் மூப்பனாருக்கு, முதல்வர் கருணாநிதியின் மீது நேரடியானமனத்தாங்கல்கள் எழுந்தன. அந்த மனத்தாங்கலைக்கண்டு வருத்தப்பட்டவர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். நான்எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கிறது. எனக்கு இந்த அரசியல் புரியவில்லை என்று தனது நெருக்கிய வட்டாரங்களில்வருத்தப்பட்டாரம் ரஜினி.

கூட்டணிக் கட்சி, ரஜினிகாந்தின் சமாதானம் என்று பல கோணங்களில் யோசித்து, அந்த விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது.கேஸ் நடக்கிறது என்று பெயிலில் உடனே வெளியே வந்தும் விட்டார் கோபாலகிருஷ்ணன். விசாரணை ஒரு புறம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இது நடந்தது 1996-ம் ஆண்டு இறுதியில் அதாவது, த.மா.கா உதயமான ஆறாவது மாதம் இது நடந்தது. கிட்டதட்ட நான்கரைவருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை இப்பொழுது நினைவுபடுத்தி பேசுகிறார்கள் த.மா.கா பிரமுகர்கள்.

முதலில் பேசிய த.மா.கா பிரகருக்கு அருகில் இருந்த த.மா.கா எம்.எல்.ஏ சொன்னார், கிட்டதட்ட எல்லாத்தையுமே மறந்து முழுநேரமாக அரசியலில் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். தி.மு.கவுடன் கூட்டணி என்பது நீண்ட காலத்திட்டமில்லை. அப்படியேதொடர்ந்தாலும் அ.தி.மு.கவுடன் இப்போது காங்கிரஸ் கட்சி இருப்பது மாதிரி த.மா.காவும் தி.மு.கவுடன் இருக்கின்ற ஒரு கட்சிஎன்றாகிவிடும்.

காமராஜர் ஆட்சி என்பதுதான் எங்களின் கனவு. லட்சியம் எல்லாமே. இந் நிலையில் தி.மு.கவுடன் கூட்டணி என்பது தொடரமுடியாது என்பது நன்றாகவே தெரிந்துதான் தி.மு.கவில் இருந்து வெளியேறினோம். இப்பொழுது அ.தி.மு.கவுடன் கூட்டணிஎன்றாலும் எதிர்காலத்தில் அதுவும் சரிவராது என்று எங்களுக்குத் தெரியும். அ.தி.மு.கவுடன் கூட்டணி வேண்டாம் என்றுஅப்போதே பலர் சொல்லியும் தடுக்கமுடியாமல் போய்விட்டது என்றார் அந்த எம்.எல்.ஏ.

இப்போது தொடர்ச்சியாக போராட்டம். மூன்றாவது அணி என்று சீரியஸாக தலைவர் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார்மூப்பனார். த.மா.காவின் ஒவ்வொரு வளர்ச்சியும் தி.மு.கவுக்கு எதிரானதாகவே நினைக்கிறார்கள் தி.மு.க தலைவர்கள்.

இந்தப் பின்னணியில் தான் மறுபடியும் உயிரூட்டப்பட்டிருக்கிறது இந்தியன் வங்கி விவகாரம் என்கிறார்கள் த.மா.காவினர்.இந்தியன் வங்கி ஊழலில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள 25 வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்க ஏது வாக சென்னையில்தனி நீதிமன்றம் அமைக்க மத்திய அரசு சம்மதித்து உள்ளது.

இந்தியன் வங்கி ஊழல் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னையில் ஒரு தனி நீதி மன்றம்விரைவில் ஏற்படுத்தப்படும் என்று சி.பி.ஐ இயக்குனர் ராகவன் டெல்லியில் அறிவித்தார். தனி நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டுஆறுமாதத்திற்குள் வழக்குகளை முடித்துவிட தீர்மானித்திருக்கிறதாம் மத்திய அரசு.

தீடீரென்று டெல்லியில் இருந்து வந்த இந்தத் தாக்குதலில் த.மா.காவினர் ஆடித்தான் போயிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும்ஆறு மாதங்களே இருக்கின்ற நிலையில் இந்தியன் வங்கி ஊழல் வழக்குகள் த.மா.கா பிரமுகர்கள் மீதும் திரும்புமோ என்றுகலங்கிப் போயிருக்கிறார்கள்.

நடப்பது நடக்கட்டும் இதெல்லாம் தி.மு.கவின் சதி. போதாத குறைக்கு, கோபாலகிருஷ்ணனும், முன்னாள் அமைச்சர்கண்ணப்பனுடன் சேர்ந்து மக்கள் தமிழ் தேசம் என்று கட்சி ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை அரசியலில்தலையெடுக்க விடக் கூடாது. கோபாலகிருஷ்ணன் மீது உள்ள வழக்குகளை தீவிரமாக்கினால், த.மாகாவுக்கும் சிக்கல்.தேர்தலுக்குள் வழக்கை முடித்து தீர்ப்பை மக்களுக்குச் சொல்வோம். மக்கள் புரிந்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில், மூப்பனார்,த.மா.காவினர் மீதுள்ள க்ளீன் இமேஜை குலைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி தான் இது என்கிறார்கள் த.மா.காவினர்.

இந்த வழக்கு விவகாரங்கள் சூடுபிடிப்பதற்கு முன்பாக த.மா.காவின் ழுமையான அரசியல் செல்வாக்கை காட்டிவிடவேண்டும்என்பதில் கவனமாக இருக்கிறார்கள் த.மா.காவினர். இதுவரையில்லாத ஒரு பெரிய வேகத்துடனும், அரசியல்ரீதியாகவும்இந்தப்போராட்டம் இருக்கும் என்று உறுதியாகச்சொல்லும் த.மா.காவினர்.

இதில் என்ன அரசியல்ரீதியான பார்வை இருக்கிறது என்பது புரியவில்லை. ஐயா, இந்தியன் வங்கியில் 800 கோடி கடன்கொடுக்கப்பட்டது. அது திரும்ப வரவில்லை. நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் யார் காரணம், யார் யார் பணம்கட்டவில்லை என்பதை அரசு விசாரிக்காதா? இதைப்போய் அரசியல் அது இது என்று வேறு கண்ணோட்டத்துடன் பார்க்ககூடாது.மூப்பனார் பாணியிலேயே சொல்வதானால்.. சட்டம் தன் கடமையைச் செய்கிறது அவ்வளவு தான் என்கிறார்கள் தி.மு.கவினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X