தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த ஆந்திர மீனவர்கள்
சென்னை:
ஆந்திர கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக சென்னையைச் சேர்ந்த 64 மீனவர்களை ஆந்திர மீனவர்கள்சிறைப்பிடித்துள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன் எட்டு மீன் பிடி படகுகளில் 64 தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மண்ணூ
மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட விசைப்படகு சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், செல்வகுமார், ஆனந்தன் ஆகியோர் ஆந்திர மாநிலம் சென்றுள்ளனர். அங்கு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்கபேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
கடந்த வாரம் இதேபோல் 72 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வாங்கிக்கொண்டு பின்புவிடுதலை செய்தனர். தொடர்ந்து இதேபோல் ஆந்திர மீனவர்கள் செய்து வருவதால் தமிழக மீனவர்கள் ஏக கோபத்தில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications