For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் மீட்கப்பட்ட சென்னை மீனவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடுக்கடலில் காணாமல் போன 5 சென்னை மீனவர்கள் வங்கதேசம் அருகில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய் கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை ராயபுரம் மீன்பிடி தளத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்களும், வங்க தேசம்கடல் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

எம்.டி.எஸ். 503 "நோவா என்ற மீன் பிடிப்படகில் சென்னை ராயபுரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது திடீரென்று திசை மாறிகாணாமல் போய் விட்டனர்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் அறிவுரையின்பேரில், காணாமல் போன 5 மீனவர்களையும், படகையும் கடல் மற்றும் வான்வழியாக தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடல்படை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் மீன்வளத் துறையின் பெரிய படகுகளின் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று கிழக்கு கடற்கரை பகுதியில்உள்ள ஆந்திரா, வங்காள தேசம் ஆகிய பகுதிகளிலும் காணாமல் போன மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வந்தன.

தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக காணாமல் போன 5 மீனவர்களும் 18ம் தேதி இரவு 9 மணியளவில் கொழும்புசென்று கொண்டிருந்த வணிகக் கப்பலால் வங்க தேச கடல் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சென்னை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்கள் மாயாண்டி (45), பார்த்திபன் (35), மூர்த்தி (27), மதன் என்ற மணி (22), வடிவேல் (28) ஆகியோர் விரைவில் சென்னைதிரும்புவார்கள் என்று அறிக்கையில் அரசு உறுதியளித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X