தேவே கெளடா உள்பட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு
ஊட்டி:
ஊட்டியில் சாலை மறியல் செய்ய முயன்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா உட்பட 1000 பேர் மீது போலீசார்வழக்குப் பதிவு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் தேயிலைப் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சியினர் முன்னாள் பிரதமர்தேவகவுடா தலைமையில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இதற்காக தேவகவுடா செப்டம்பர் 16ம் தேதி கோவை வந்தார். 17ம் தேதி ஊட்டிக்குச் சென்று தங்கினார். பின்னர்18ம் தேதி காலை எச்.பி.எப் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு நிலவும் பிரச்னை குறித்துவிவாதித்தார். தொழிற்சாலையை மூடாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தொழிலாளர்களிடம்உறுதியளித்தார்.
பின்னர், தேயிலை விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் பெருந்துறைஎம்.எல்.ஏ., பெரியசாமி., திருவட்டாறு எம்.எல்.ஏ., ஹேமாச்சந்திரன் உட்பட பெருமளவில் விவசாயிகள் கலந்துகொணடனர்.
மறியல் போராட்டத்திற்கு முன்னதாக விவசாயிகள் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் ரோடு வழியாக சேரிங் கிராசைஅடைந்தனர். அங்கு தேவகவுடா தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போலீசார் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்று விட்டனர். போலீசார்வழக்குப் பதிவு செய்த போதிலும் யாரையும் துை செய்யவில்லை.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, இரண்டு எம். எல்.ஏ,க்கள் உட்பட ஆயிரம் பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகக் கூடியிருத்தல், சாலை மறியல் செய்தல், தடையை மீறுதல் ஆகியகுற்றங்களுக்காக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications