வேலூரில் எரிந்துபோன கோவில் தேர்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரில் மிகப்பழமையான, புராதனமிக்க பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட, ரூ 25 லட்சம் மதிப்புள்ள இரண்டு தேர்கள் திங்கள்கிழமை எரிந்துசாம்பலாயின.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே இருக்கிறது திமிரி. இங்குள்ள பஸ்நிலையம் அருகில், திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 125ஆண்டுகால பழமையான புராதானமிக்க இரண்டு தேர்கள் இருந்தன.

இதில் ஒரு தேர் 40 அடி உயரம், மற்றொன்று 18 அடி உயரம் உடையது. திங்கள்கிழமை நள்ளிரவு தீடீரென்று இந்த இரு தேர்களும் தீப்பிடித்துஎரிந்தன.

எரிந்து சாம்பலான தேர்களின் மதிப்பு சுமார் இருபத்தைந்து லட்சரூபாய் ஆகும். தீப்பிடிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் அங்கே வந்தும்தேரைக் காப்பாற்ற முடியாதது ஆச்சர்யமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் வேலூர் மக்கள்.

சம்பவத்தன்று நள்ளிரவு அந்தப்பகுதியில் திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றதாகவும் அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசு வெடித்து, அதிலிருந்து கிளம்பியதீப்பொறிகள் தேரில் பட்டு தீப்பிடித்ததாகச் சொல்கிறார்கள்.

125 ஆண்டுகால பழமையான தேர்கள் பட்டாசுத் தீப்பொறிகளின் மூலம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது என்பது நம்பமுடியாத ஆச்சர்யமாகவேஇருக்கிறது. வேலூர் மாவட்டப்போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+