Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவே கெளடாவின் கறுப்புத்துண்டு சபதம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

தேயிலைப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை கறுப்புத் துண்டு அணிவேன் என முன்னாள் பிரதமரும், ஜனதாள (எஸ்) தலைவர்களில் ஒருவருமான தேவேகெளடா ஊட்டியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஊட்டியில் தேயிலை விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் தேவகவுடா உள்பட 1000 பேர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். ஆனால் இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேல் போலீஸார் ஆலோசனை நடத்தி விட்டு இறுதியில்கவுடாவையும், பிறரையும் கைது செய்யவில்லை.

சாலை மறியலின்போது முன்னாள் பிரதமர் தேவே கெளடா பேசியதாவது:

தேயிலைப் பிரச்னையில் இன்று கறுப்பு நாளாக கருதப்படுகிறது. இதனை நினைவுபடுத்தும் வகையில் அ.தி.மு.க.,வினர் எனக்கு கறுப்பு சால்வைஅணிவித்துள்ளனர். தேயிலைப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை இந்த சால்வையை நான் தொடர்ந்து அணிவேன்.

மத்திய அரசு தேயிலை விவசாயிகளின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இதனை அணிந்திருப்பேன்.

தேயிலை விவசாயிகள் மீது தமிழக அரசு தாக்குதல்களை நடத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் முதல்வருக்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

கருணாநிதியின் ஆட்சி காலம் இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. நான் முதல்வராக இருந்தபோது விவசாயிகள் மீது எவ்வித தாக்குதல்களையும்நடத்தியதில்லை.

பிரதமர் வாஜ்பாய் விவசாயியாக இல்லை. அவருக்கு விவசாயிகளின் மீது அக்கறை இல்லை. சுயநலமிக்க, அதிகாரப் போக்குள்ள ஒரு ஆதிக்கத்தின் பிடியின்வாஜ்பாய் அரசு செயல்பட்டு வருகிறது.

வாஜ்பாய் அரசை இந்த சக்தி கட்டுப்படுத்தி வருகிறது. விவசாயிகளின் பிரச்னைக்காக நான் தொடர்ந்து போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார் கெளடா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+