திமுக உள்கட்சி சண்டை மக்களை பாதிப்பதா?
சென்னை:
மதுரை வன்முறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்கட்சி விவகாரத்திற்காக திமுகவினர் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் சங்கரய்யா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று கட்சி மேலிடம்கட்டளையிட்டதை அடுத்து மதுரையில் திமுகவினர் வன்றையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசி பஸ்களை எரித்துள்ளனர். வன்முறை வெறியாட்டத்தில் கடைகள், தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் சகஜவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை செயலிழந்து நிற்கிறது.
அரசு நிர்வாகம் நிலைகுலைந்துவிட்டது. திமுகவினரின் இத்தகைய அராஜகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடுமையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார் சங்கரய்யா.












Click it and Unblock the Notifications