பாக். குண்டுவெடிப்பு: அமெரிக்கா கண்டனம்
வாஷிங்டன்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்புக்கு அமெரிக்கா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள பழ மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை காலை குண்டு வெடித்தது. இதில் 15 பேர்இறந்தனர். 75 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் பி.ஜே. கிராவ்லே கூறியதாவது:
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு கண்டிக்கத்தக்கது. அப்பாவி மக்களைக் குறிவைத்து இந்த குண்டு வெடிப்புநடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும்அமெரிக்காவின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை. இச் சம்பவத்துக்குக் காரணமாக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குசட்ட ரீதியான கடும் தண்டனை வழங்கவேண்டும் என்றார் கிராவ்லே.












Click it and Unblock the Notifications