ராஜ்குமார்: கர்நாடகம் முழுவதும் கேபிள் டிவி ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார் கடத்தலைக் கண்டித்து கர்நாடகம் முழுவதும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பந்த் நடத்திவருகின்றனர்.

புதன்கிழமை காலை துவங்கிய இந்தப் போராட்டம் வியாழக்கிழமை காலை வரை நீடிக்கும். இந்த 24 மணி நேரபந்த் கர்நாடகம் முழுவதும் முழு வெற்றி அடைந்துள்ளது.

அரசுத் தொலைக்காட்சியின் அறுவை நிகழ்ச்சிகளில் இருந்து மக்களைக் காப்பாற்றி வரும் செயற்கைக் கோள்டிவிக்கள் ஏதும் இல்லாமல் மக்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.எண்டர்டெய்ன்மென்ட் கேபிடலான பெங்களூரில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தியேட்டர்களில் கூட்டம்அலைமோதியது. பிரிகேட் ரோட், கமர்ஷியல் ஸ்ட்ரீட்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஸ்டார் டிவியிலிருந்து சன் டிவி வரை எந்தச் சேனலும் இல்லை. கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் மிகவும்விரும்பிப் பார்க்கப்படுபவை சன், விஜய், ராஜ் டிவி போன்ற தமிழ் சேனல்கள் தான். இதற்கு அடுத்த இடத்தைஇந்தி சானல்களும், அடுத்து ஆங்கில சேனல்களும் பிடித்துள்ளன.

கன்னட சேனல்கள் பெங்களூரில் அவ்வளவாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால், கர்நாடகத்தின் பிற பகுதிகளில்இந்த சேனல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. சன் டிவி குரூப்பிலிருந்து உதயா என்ற கன்னட சேனலும், உஷேஎன்ற கன்னட சேனலும் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர கேரளத்தின் ஏசியா நெட் குரூப்பிலிருந்து காவிரிஎன்ற சேனலும், சுப்ரபாதா என்ற மற்றொரு கன்னட சேனலும் இயங்கி வருகின்றன.

கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஒரு நாளைக்கு இரு படங்களாவது காட்டுவது வழக்கம். இது தான் வீட்டில்இருக்கும் பெண்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது.

புதன்கிழமை இவர்கள் படாத பாடு பட்டுவிட்டார்கள். மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்களும்,பள்ளி-கல்லூரிகளில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவர்களும் கேபிள் டிவி இல்லாமல் போரடித்துப்போய்அமர்ந்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+