இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை: ரஷிய துணை பிரதமர் டெல்லி வருகை
டெல்லி:
இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பது தொடர்பாக ஆலோசனை நடத்த ரஷிய துணைப்பிரதமர் இல்யா கிளிபானோவ் தலைமையில் உயர்மட்டக் குழு புதன்கிழமை இரவுடெல்லி வருகிறது.
ரஷ்ய துணைப்பிரதமரும், அவருடன் வரும் அதிகாரிகளும் இந்தியாவில் மூன்றுநாட்கள் தங்கி இருப்பார்கள். இந்த மூன்று நாட்களில் அவர்கள் அமைச்சர்களுடனும்,பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நீண்ட நாட்களாக முடிவு செய்யப்படாமல் இருக்கும்விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
இந்த பிரதிநிதிக் குழுவில் ரஷ்ய அணு சக்தி அமைச்சர் யெவ்ஜெனி அடோமோவும்பங்கு பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் அணு சக்தி நிலையங்கள் அமைப்பது பற்றிபேச்சு வார்த்தை நடத்துவார்.
இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த ரஷ்யா விரும்புகிறது. இதுவரைகையெழுத்தாகாமல் இருந்து வரும் ஒப்பந்தங்கள் புடினின் இந்திய விஜயத்தின்போதுகையெழுத்தாக வேண்டுமென்பதில் ரஷ்யா அதிக அக்கறை காட்டி வருகிறது.
இந்திய-ரஷ்ய கூட்டு பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிபரின்விஜயத்தின் போது கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தம் நீண்ட நாட்களாககையெழுத்தாகாமல் இருந்துவருகின்றன.
இந்த ஒப்பந்தம் முன்னபே கையெழுத்தாகியிருக்க வேண்டும். ஆனால் ரஷ்ய அதிபர்போரிஸ் யெல்சின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியாவிற்கு வர இயலவில்லை.அதனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருந்தது.
ரஷ்ய துணை பிரதமரின் விஜயத்தின் போது 300, டி-90 ரக டாங்குகளை இந்தியாரஷ்யாவிடமிருந்து வாங்குவது குறித்து பேச்சவார்த்தை நடைபெறும். இதன் விலைஅதிகமாக இருப்பதால் குறைக்க வேண்டுமென இந்தியா கோரி வருகிறது.
விமானம் தாங்கி கப்பலை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்த மாத இறுதிக்குள்கையெழுத்தாகும் என ரஷ்ய துணைப் பிரதமர் மாஸ்கோவிலிருந்து இந்தியாவுக்குக்கிளம்பும் முன் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம்2-ம் தேதி இந்தியா வரவிருக்கிறார்.அப்போது முடிவு செய்யப்பட உள்ள ராணுவ ஒப்பந்தங்கள் குறித்து இவர்கள்பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications