காட்டுக்குப் புறப்பட்டார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் புதன்கிழமை இரவு காட்டுக்குப்புறப்பட்டுச் சென்றார்.
இது கோபாலின் நான்காவது பயணமாகும்.
கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் 3 பேரை விடுவிக்க வீரப்பனின் விதித்துள்ள நிபந்தனைகளான தடா கைதிகள்விடுதலை, தமிழ் தீவிரவாதிகள் விடுதலை ஆகிய விவகாரங்கள் நீதிமன்றத்தில் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளன.
இந் நிலையில் வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டு 52 நாட்கள் ஆகிவிட்டதாலும், கர்நாடகத்தில் கன்னடஇயக்கங்கள் மிரட்டி வருவதாலும் வீரப்பனைச் சந்திக்கச் செல்லுமாறு கோபாலுக்கு முதல்வர் கருணாநிதிகோரிக்கை விடுத்தார்.
செவ்வாய்க்கிழமை கோபாலை அழைத்தும் கருணாநிதி பேசினார். ஆனால், வீரப்பனின் கோரிக்கைகள் எல்லாமேநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இப்போது போய் பேச்சு நடத்தினாலும் எந்தப் பயனும் இருக்காது எனக்கூறிய கோபால் காட்டுக்குள் செல்ல மறுத்தார்.
ஆனால், கருணாநிதி நிர்பந்தித்ததையடுத்து அவர் காட்டுக்குப் புறப்பட்டார். புதன்கிழமை இரவுசென்னையிலிருந்து கோபால் புறப்பட்டார். வீரப்பனை சில தினங்களில் அவர் சந்திப்பார்.












Click it and Unblock the Notifications