மனைவியின் இறுதிச் சடங்கை முடித்து சிட்னி திரும்பினார் சாமரான்ச்
சிட்னி:
சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் அந்தோனியோ சாமரான்ச், தனது மனைவியின்இறுதிச் சடங்கை முடித்துவிட்டு புதன்கிழமை சிட்னி திரும்பினார்.
சிட்னி ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியின்போது அவரது மனைவி மரியாதெரசாவின் உடல் நிலை மோசமானதாக தகவல் வந்தது. உடனே அவர் தனது சொந்தஊரான ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்குச் சென்றார்.
ஆனால், அவர் சென்று சேருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே அவரது மனைவிஇறந்துவிட்டார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அவசரமாக சாமரான்ச் சொந்த ஊர் திரும்பியதை அடுத்து சிட்னியில் ஒலிம்பிக்விளையாட்டுகளை சர்வதேச ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் கெவன் கோஸ்பர்கவனித்து வந்தார்.
இந் நிலையில், மனைவியின் இறுதிச் சடங்கை முடித்து புதன்கிழமை காலை சிட்னிவந்து சேர்ந்தார் சாமரான்ச். அவரை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் விளையாட்டு அமைச்சர்மைக்கேல் நைட் மற்றும் கெவன் கோஸ்பர் வரவேற்றனர்.
மீண்டும் சிட்னி வந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. வெகுவிரைவில் சிட்னிதிரும்பவேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே சிட்னி வந்து சேர்ந்தேன். இங்குநான் சில விளையாட்டுகளைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றார்80 வயதான சாமரான்ச்.












Click it and Unblock the Notifications