வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
பாண்டிச்சேரி:
டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்டதையடுத்து பாண்டிச்சேரியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களைச் சேர்ந்தகுடும்பங்களுக்கு தலா ரூ. 3,000 உதவித் தொகையும், 10 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் சண்முகம் பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமதாஸ் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம், 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி 15-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளனர்.
அவர்களிடம், அகில இந்திய மருத்துவக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி வரும்படி கூறியுள்ளோம். அவர்கள் அனுமதி பெற்றபின் தனியார்மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டால் அதில் 50 சதவீத இடத்தை பாண்டிச்சேரி மாணவர்களுக்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்றார்சண்முகம்.
யு.என்.ஐ.