டென்னிஸ் ஒற்றையர் பதக்கக் கனவு பறிபோனது: தோற்றார் லியாண்டர் பயஸ்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்தனது முதல் சுற்று ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்.
இதன் மூலம் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்லும் இந்தியாவின் கனவுதகர்ந்து போனது.
1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ்வெண்கலப் பதக்கம் வென்றார் என்பதும் அந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஒரேபதக்கம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் லியாண்டர் பயஸ் 6-2, 6-4என்ற நேர் செட்டுகளில் ஸ்வீடன் வீரர் மைக்கேல் டில்ஸ்ட்ராமிடம் தோற்றார்.
ஒற்றையர் பிரிவில் தோற்றாலும் மகேஷ் பூபதியுடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில்லியாண்டர் பயஸ் மோதுகிறார். புதன்கிழமை பிற்பகல் இவர்களுக்கான முதல் சுற்றுஆட்டம் நடைபெறுகிறது. அதில் ருமேனிய ஜோடியை எதிர்த்து விளையாடுகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications