எகிப்து, போர்ச்சுகல், பூடான் நாடுகளுக்கு புதிய தூதர்கள்
டெல்லி:
வெளிநாட்டுத் தூதர்கள் நியமனத்தில் சில மாற்றங்களைமத்திய வெளியுறவுத் துறைவியாழக்கிழமை மேற்கொண்டது.
எகிப்து, போர்ச்சுகல், பூடான் ஆகிய நாடுகளுக்கான புதிய இந்திய தூதர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரியாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றி வரும் யோகேஷ் மோகன் திவாரி,எகிப்து நாட்டுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டுக்கான தூதராக இருந்த எஸ்.எஸ். முகர்ஜி, தென் ஆப்பிரிக்காவுக்கானதூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெலாரஸ் நாட்டுக்கான தூதராக இருந்த மது பாதுரி போர்ச்சுகல் நாட்டுக்கான தூதராகநியமிக்கப்பட்டுள்ளார்.
மாலத்தீவுக்கான ஹை-கமிஷனராக இருந்த கன்வர் சிங் ஜாஸ்ரோடா, பூடான்நாட்டுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் தங்களது புதிய பொறுப்புக்களை விரைவில் ஏற்றுக்கொள்வார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.