கோவையில் யானை மிதித்து எஸ்டேட் ஊழியர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
வால்பாறை அருகே யானைமிதித்து ஒருவர் பலியானார்.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதி தேயிலை தொழிலாளி பொம்மன் வயது (35).
இவர் பவானி அருகே உள்ள அந்தியூரைச் சேர்ந்தவர். வால்பாறையில் எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.செப்டம்பர் 20ம் தேதி மாலை வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, யானைஒன்று அவரை வழிமறித்து மிதித்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக வந்து கொண்டிருந்த மற்ற தொழிலாளிகள் பொம்மனைசிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துபோனார்.












Click it and Unblock the Notifications