இந்தியாவில் ஜெர்மன் விழா
டெல்லி:
இந்தியாவில் ஜெர்மன் விழா நடக்கவுள்ளது. ஜெர்மன் அமைச்சரும், துணை வேந்தருமான ஜோஷ்கா பிஷர் இதற்கான ஏற்பாடுகளை கவனத்துவருகிறார். இதன் தொடக்க விழா செப்டம்பர் 30 ம் தேதி நடக்கும்.
2000 மாவது ஆண்டு அக்டோபர் முதல் 2001 ம் ஆண்டு மார்ச் வரை இந்த விழா நடக்கும். இந்த விழாவையடுத்து இந்தியாவின் 27 முக்கியநகரங்களில் நாட்டியம், இசை, சினிமா, பொழுதுபோக்கு, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இதுகுறித்து டெல்லியிலுள்ள மாக்ஸ் முல்லர் பவன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா மற்றும் ஜெர்மன் ஆகிய இரண்டு நாடுகளிலும், கலை மற்றும் இலக்கியத்தை முன்னேற்றும் விதத்தில் இந்த விழா கொண்டாடத்திட்டமிட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே கலை, அறிவியல் தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறையிலும் இரு நாடுகளும் நன்கு வளர்ச்சி கண்டு வருகின்றன.
கலை மற்றும் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று 1989 ம் ஆண்டு இரு நாடுகளும்ஒப்பந்தம் செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, 1991-92 ம் ஆண்டில் ஜெர்மனியில் இந்திய விழா நடந்தது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது மாக்ஸ்முல்லர் பவன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications