இதோ...மற்றொரு அரசியல் கட்சி
திருச்சி:
முஸ்லீம் மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சி திருச்சியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
சமுதாய ஒற்றுமை, மனித நேயம், சிறுபான்மையினர் நலன் கருதி புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான மேல்மட்ட ஆலோசனை கூட்டம் திருச்சியில்நடைபெற்றது.
புலிவலம் அப்துல் சலீம் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் சமுதாய நலன் கருதி முஸ்லீம் மக்கள் கட்சி உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.
கட்சித் தலைவராக திருச்சி ஜி.அஜிமுத்தீன், பொதுச்செயலாளராக தஞ்சை எம்.காஜாமொய்தீன், பொருளாளராக புலிவலம் எம். அப்துல் சலீமும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. வரும் சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடுவது.
2. காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வது.
3. நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டுகோள்.
4. பெட்ரோல், சிமென்ட், கியாஸ் விலை உயர்வைக் கண்டிக்கிறது.
5. கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டிக்கிறது.
6. முஸ்லீம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று பாரபட்சம் இல்லாமல் அவர்களை விடுவிக்கக் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications