தசாரா ஊர்வலத்தை தொடங்கி வைக்க பர்வதம்மா மறுப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மைசூரில் நடக்கவிருக்கும் தசார ஊர்வலத்தை கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா துவக்கி வைக்க மறுத்துள்ளார்.

மைசூரில் நடக்கும் தசரா விழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த விழா வரும் 28-ம்தேதி துவங்குகிறது அக்டோபர் 7-ம் தேதி தசரா ஊர்வலம் நடைபெறும். இது தசாராவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானதாகும். அப்போது யானை மீது தங்க அம்பாரி சுமந்துசெல்லும் காட்சி கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கும்.

இதைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவர். இந்த ஊர்வலத்தை துவக்கிவைக்க பிரபல கன்னட நடிகரை அழைக்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது.

சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் பிணைக்கைதியாக இருக்கும் கன்னட நடிகர் விடுதலைதாமதமாவதால் அவரது மனைவி பர்வதம்மாளை இந்த ஊர்வலத்தை துவக்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டு அழைப்பிதழுடன் ஆரம்ப கல்வி அமைச்சர்விஸ்வநாத் ராஜ்குமார் வீட்டிற்கு சென்றார்.

ஆனால் ராஜ்குமார் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். பர்வதம்மாவின்தம்பி சின்னே கவுடா கூறுகையில் ராஜ்குமார் இல்லாமல் வீடே கவலையில் உள்ளது.பர்வதம்மா அந்த விழாவை தொடங்கி வைக்க மாட்டார். ராஜ்குமார் இல்லாமல் அந்தவிழாவில் நாங்கள் எப்படி கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் கேள்விஎழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+