டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பயஸ்-பூபதி தோல்வி; பதக்க வாய்ப்பு பறிபோனது
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின்லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி தோல்வியுற்றது. இதன் மூலம் டென்னிஸில்இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தங்களது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியஜோடி, ஆஸ்திரேலியாவின் மார்க் உட்போர்டே-டாட் உட்பிரிட்ஜ் ஜோடியை எதிர்த்துவிளையாடியது. இதில் 6-3, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் இந்திய ஜோடிதோல்வியுற்றது.
இதன் மூலம் டென்னிஸில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கு வாய்ப்பு பறிபோனது.ஏற்கெனவே பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நிருபமாவைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி முதல் சுற்றில் படுதோல்வியுற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்வீடன்வீரர் டில்ஸ்ட்ராமிடம் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. அதை டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் பெற்றுத் தந்தவர்லியாண்டர் பயஸ். ஆனால், இந்த முறை டென்னிஸ் போட்டியில் ஒரு பதக்கம் கூடஇந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications