வீரப்பன் கூட்டாளிகளுக்கு 3 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட வீரப்பன் கூட்டாளிகளுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குதிரைமடுவு என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரப்பன்கூட்டாளிகள் எனச் சந்தேகத்தின் பேரில் சிலரை போலீசார் பிடிக்க முயன்றனர்.

கடந்த 1998ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நடந்த இந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் போலீசார் காயமடைந்தனர். மேலும், எட்டுப் பேரை பிடித்தனர்.இவர்களிடம் நடந்த விசாரணையில் இவர்கள் அனைவரும் வீரப்பனின் கூட்டாளிகள் எனத் தெரிய வந்தது.

மேலும், இவர்கள் வீரப்பனுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றனர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

கோபி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் 8 பேருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி நூர்முகமதுதீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+