For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹாக்கி: ஸ்பெயினைத் தோற்கடித்தது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

ஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பி பிரிவில் முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவெற்றி பெற்றது.

சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல்கணக்கில் அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்பெயின்அணியைத் தோற்கடித்து.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மேலும்பிரகாசமடைந்தது. இப்போது பி பிரிவில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில்உள்ளது.

ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் பல்ஜித் சிங் தில்லான் முதல் கோல் அடித்துஇந்தியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தித் தந்தார். கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அவர் கோல் போட்டார்.

இதையடுத்து ஸ்பெயின் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை கடுமையாக்கினர். முதல் பாதிஆட்டம் முடிய 14 நிமிடங்கள் இருந்தபோது ஒரு கோல் போட்டு சமன் செய்தனர்.

இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இருந்ததால்இந்திய அணியினர் தங்களது ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.

இதனால், முதல் பாதி ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது இந்தியாவுக்கு ஒருபெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை திலிப் டர்க்கி சரியாகப் பயன்படுத்திகோல் போட்டதால் இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 7-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னர்வாய்ப்பை பல்ஜித் சிங் தில்லான் கோலாக மாற்றியதால் இந்தியா 3-1 என்றுமுன்னிலை பெற்றது.

இதையடுத்து ஸ்பெயின் வீரர்கள் தங்களது ஆட்ட முறையை மாற்றினர். கோல் போடஅவர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் ஜூடேமெனசெஸ் தடுத்துவிட்டார்.

இருப்பினும் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் வித்தியாசத்தை 3-2 என்றஸ்பெயின் வீரர்கள் குறைத்தனர். ஆனால், அதன் பிறகு அவர்களுக்கு கோல் போடவாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்திய கோல்கீப்பரின் சிறப்பான ஆட்டத்தில் இந்தியா மேலும் கோல் வாங்காமல் தப்பியது.

இதையடுத்து 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. மிகவும்முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிவாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

இப் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடந்தஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 8 புள்ளுகளுடன் முதலிடத்தில்உள்ளது. இந்தியா 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென் கொரியா 5புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன.

இந்தியா அடுத்து போலந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அந்தஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அரையிறுதியில் இந்தியா நுழைய முடியும்.

ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய கிடைத்தவிட்டது மாதிரிதான்.ஆனால், இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. தென் கொரியாஅடுத்து தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவுக்கு வாய்ப்புகிடைப்பது சிரமமாகிவிடும்.

ஏனெனில் தென் கொரியா அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதற்கு மொத்தம் 8புள்ளிகள் கிடைக்கும். இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால்பிரச்சினையில்லை. அரையிறுதியில் நுழைந்துவிடும்.

மாறாக போலந்துடன் டிரா காணும் பட்டத்தில் ஒரு புள்ளிதான் இந்தியாவுக்குக்கிடைக்கும். அப்போது தென் கொரியாவும், இந்தியாவும் தலா 8 புள்ளிகளுடன்இருக்கும். ஏற்கெனவே தகுதிச் சுற்றில் இந்தியாவை தென் கொரியா வென்றுள்ளதால்அதற்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்துவிடும்.

ஆகவே, போலந்துடனான அடுத்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அரையிறுதியில் நுழைந்துவிடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X