கண்ணனை நீக்க யாரும் கோரவில்லை .. புதுவை முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்துசமீபத்தில் விலகியவருமான கண்ணனை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு யாரும்தன்னிடம் கேட்கவில்லை என அம்மாநில முதல்வர் ப.சண்முகம் கூறியுள்ளார்.

பாண்டிச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் உள்பட யாரும் இதுதொடர்பாக என்னை அணுகவில்லை.

தற்போது பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நடந்து வரும் பிரச்சிசனைகள்அந்தக் கட்சியின் உள் விவகராம். இதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.

ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ராஜாராமன் இன்னும் என்னைச் சந்தித்து எனது ஆட்சிக்குஅவரது ஆதரவைத் தரவில்லை. மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணி எப்படிமதவாத சக்திகளின் ஆதரவைப் பெற முடியும்?

ஒரு ஆட்சியின் நடைமுறைகளைப் பார்த்துத் திருப்தி கொண்டு ஒரு கட்சி, ஆட்சிக்குஆதரவு கொடுக்க முன்வந்தால் அதை மறுக்க முடியாது.

சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும்என்று திமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஜானகிராமன்கோரியுள்ளது வியப்பூட்டுகிறது. ஏதாவது ஒரு கட்சி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவைவாபஸ் பெற்றால்தான் இதுமாதிரியான சூழ்நிலை ஏற்படும்.

தற்போதைய சூழ்நிலையில் த.மா.கா. உள்பட கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எங்களதுஆட்சிக்கு ஆதரவு தருகின்றனர். எனவே நம்பிக்கை வாக்கு கோருவது என்ற அவசியமேஎழவில்லை என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+