சமரச முயற்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி
மதுரை:
தி.மு.க தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி, ஸ்டாலின் இருவருக்கும் இடையே நடந்து வரும்அதிகார போட்டி, மதுரையை யுத்தகளமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
இன்னும் இந்த சண்டையின் தகதகப்பு மாறாமல் இருக்கிறது மதுரை. திரும்பிய பக்கமெல்லாம் அழகிரின் ஆதரவாளர்கள் மிகஆவேசமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய விவகாரமாக விஸ்வரூபமெடுத்துவரும் அழகிரிபிரச்சனையைக் கட்டுப்படுத்த மதுரைக்கு விரைந்திருக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அடுத்து தி.மு.கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தான் என்று சென்னை கடற்கரை கூட்டத்தில் நடந்தமுப்பெரும் விழாவில் அறிவிக்கப்பட வெகுண்டெழுந்தார் முதல்வரின் இன்னொரு மகன் அழகிரி.
கடற்கரைக் கூட்டத்தில் அறிவித்தது மட்டுமல்ல, அறிவிப்புகளைத் தொடர்ந்து தி.மு.கவினர் எவரும் அழகிரியுடன் தொடர்புகொள்ளக் கூடாது என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்ததைத் தொடர்ந்து, மதுரை அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் ஆற்காடு வீராசாமி தொடர்ந்து அழகிரியுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள்மதுரையில். பேச்சுவார்த்தையில் அழகிரி பிடிகொடுத்தே பேசவில்லை என்றும் சொல்கிறார்கள்.
தென் மாவட்ட தி.மு.க எப்பொழுதும் போல் என் பிடிக்குள் தான் இருக்கவேண்டும். கட்சியிலும் பொறுப்புகள் வேண்டும்என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அழகிரி.
இன்னும், ஆற்காடு வீராசாமி மதுரையிலேயே தங்கியிருக்கிறார். தொடர்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications