For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்படி இறந்தார் ரங்கராஜன்?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முன்னாள் மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லை. அவர் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டசீர்குலைவால் இறந்தார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லையென்று இதுகுறித்து அமைக்கப்பட்ட அரசு விசாரணை கமிட்டிதெரிவித்துள்ளது. ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இன்னும் 10 நாட்களுக்குள் ரங்கராஜன் குமாரமங்கலம் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் விசாரணைக் கமிட்டி அறிக்கைகள் குறித்துதெரிவிக்கப்படும்.

ரங்கராஜனின் மனைவி கிட்டி, எனது கணவரும், மத்திய மின்துறை அமைச்சருமான ரங்கராஜன் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லை. அகில இந்தியமருத்துவமனை கழகத்தின் கவனக்குறைவால் அவர் இறந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் ரத்தத்தில் ஏதோர ஒரு புரியாத நோய்க்கிருமி பரவியதால் அவர் இறந்திருக்கிறார் என்று தெரிகிறது என விசாரணைக் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றார் தாகூர்.

அகில இந்திய மருத்துவமனைக் கழகத்தின் பொதுச் செயலாளர் அகர்வாலும், ரங்கராஜன் ரத்தப்புற்றுநோயால் இறக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X