மதுரையில் இன்னொரு வன்முறை: 3 பஸ்கள் உடைப்பு
மதுரை:
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைத் தாக்க முயற்சி நடந்தது.
இதையடுத்து அவரைத் தாக்க முயன்றவர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.இந்த சண்டை வன்முறையாக மாறியது. இதில் 3 பஸ்கள் உடைக்கப்பட்டன.
மதுரைக்கு இது பொல்லாத காலம். ஒரு புறம் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள்பஸ்களை எரித்தும், உடைத்தும் வருகின்றனர். மறுபக்கம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் நரபலி ஆசிரமவிவகாரம் பூதகரமாகி பிரச்சனையை கிளப்பியுள்ளது.
இந் நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்கிருஷ்ணசாமியைத் தாக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது. இதனால், மதுரையில் புதிதாக மற்றொரு பிரச்சனைஉருவெடுத்துள்ளது.
அவனியாபுரம் அருகே பனையூர் ரோட்டில் வந்து கொண்டிருந்த கிருஷ்ணசாமியின் கார் ஊர்வலத்தை ஒரு கும்பல்கையில் கம்பு, கத்திகளுடன் வழி மறித்து தாக்கத் தொடங்கியது. குறிப்பாக கிருஷ்ணசாமியின் காரை அக் கும்பல்சுற்றி வளைத்தது. இதையடுத்து மற்ற கார்களில் வந்த அவரது ஆதரவாளர்கள் தாக்கிய கும்பலுக்கு பதிலடி தரத்தொடங்கினர்.
இந்த சண்டையில் அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த 3 பஸ்களும் சிக்கிக் கொண்டன. இரு தரப்பினரும்பஸ்களின் மீதும் கல்வீசினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. பயணிகள் உயிருக்கு அஞ்சி பஸ்களில்இருந்து இறங்கி சிதறி ஓடினர்.
அந்தப் பக்கமாக வந்த பிற வாகனங்கைளயும் இந்த வன்முறைக் கும்பல் விடவில்லை. அவற்றையும் தாக்கினர்.இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
போர்க் களம் காட்சியளித்த அந்தப் பகுதியில் கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. போக்குவரத்துஸ்தம்பித்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைந்துபோகச் செய்தனர்.
கிருஷ்ணசாமி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்துஅங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் அங்கேயே முகாமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications