மைசூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
மைசூர்:
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதால் கர்நாடத்தின் பிரபல சுற்றுலா நகரமானமைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்திருக்கிறது.
கர்நாடகத்தின் பிரபலமான சுற்றுலா நகரம் மைசூர். தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிர மாநிலங்களில்இருந்து ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மைசூர் வந்து செல்கின்றனர்.
மைசூரில் உள்ள அரண்மனை, 100 ஆண்டு பழமையான மிருகக்காட்சி சாலை, கண் கவரும் பிருந்தாவன்பூங்கா போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. இதைக் காண ஆண்டு தோறும்பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் கடத்தப்பட்ட பின் ஏற்பட்ட பதட்டதால் சுற்றுலாப்பயணிகளின் வருகைகுறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்கும் போது இந்த ஆண்டு 50 சதவிகிதம் சுற்றுலாப்பயணிகளே மைசூர் வந்துள்ளனர்.
மைசூர் அரண்மனையைக் காண செப்டம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம்சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.ஆனால் இந்த ஆண்டு 3 ஆயிரம் பேர் மட்டுமே வந்துள்ளனர்.
நுழைவுக்கட்டணம் மூலமான வருவாய் கடந்த ஆண்டு 80 ஆயிரம் ரூபாயாகும். இந்த ஆண்டு வருவாய்35 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும்.
தசரா விழாவைக் காண மைசூர் அரண்மனைக்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். இந்த ஆண்டு அதுவும் குறையலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.