சென்னையில் சினிமா உதவி கேமிராமேன் படுகொலை
சென்னை:
சென்னை தி.நகரில் சினிமா உதவி கேமிராமேன் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால். திமுக பிரமுகர். இவரது மகன் சீனிவாசன். வயது 30. இவர் சினிமாவில் உதவிகேமிராமேனாகப் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தி.நகரில் உள்ள தெற்கு உஸ்மான் ரோடு தாமோதரன் தெருவில் நண்பர் ராஜா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் ஒன்று சீனிவாசனை அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்று விட்டது.படுகாயமடைந்த சீனிவாசன் அதே இடத்தில் இறந்தார்.
இந்தப் படுகொலை தொடர்பாக 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேறு பல தகவல்கள் கிடைத்தன.
அதாவது கடந்த ஆண்டு கடந்த ஆண்டு மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் இதே எட்டு பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.அந்தக் கொலையை நேரில் பார்த்தவர் சீனிவாசன்தான். அவர் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் இந்த 8 பேருக்கும் தண்டனை கிடைக்கும்.
அதனால் அவரைத் தீர்த்துக் கட்ட பங்க் குமார் என்ற ரவுடியின் தம்பி முருகன் மற்றும் அவரது ஆட்கள் மூலம் சீனிவாசனைப் படுகொலைசெய்துள்ளனர் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications