உலகம் முழுவதும் நடக்கும் சண்டைகளில் 3 லட்சம் சிறுவர்கள் பங்கேற்பு
டெல்லி:
உலகம் முழுவதிலும் 33 நாடுகளில் நடந்து வரும் பல்வேறு சண்டைகள், போர்கள்,மோதல்களில் 3 லட்சம் சிறுவர்கள் வரை பங்கேற்றுள்ளனர் என்று ஆய்வு ஒன்றில்தெரிய வந்துள்ளது.
இந்தச் சிறுவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் மோதல்களில் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த போர்கள் மற்றும் மோதல்களில் இறக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை 90சதவீதமாக உயர்ந்துள்ளது. முதலாவது உலகப் போரின்போது இது 14 சதவீதமாகஇருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகப் போருக்குப் பின் பல நாடுகளிடையே பனிப் போர் துவங்கியது. இது இன்னும்தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு உதாரணமாக இந்தியா, பாகிஸ்தானைக் கூறலாம்.
உலகில் நடந்து வரும் இந்த மோதல்களில் 20 லட்சம் சிறுவர்கள் வரை இறந்துள்ளனர்.40 லட்சம் பேர் ஊனமுற்றனர்.
ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள்தெரிவிக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications