நன்றி மறப்பது த.மா.காவுக்கும் உண்டு ... கருணாநிதி
சென்னை:
நன்றி மறக்கின்ற காங்கிரஸ் கலாச்சாரம் த.மா.கா.வுக்கும் உண்டு என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
த.மா.கா. ஆவடி நகர மன்றத் தலைவர் சாந்திலால் ஜெயின் தலைமையில் அப்பகுதி த.மா.கா.வினர் 500 பேர் தி.மு.க.வில்இணைந்தனர். இந்நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் த.மா.காவினரை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசுகையில், 1996----ம் ஆண்டில் தான் த.மா.கா தோன்றியது. ஏன்தோன்றியது, எப்படி தோன்றியது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
அதுவரையில் அவர்களுடைய தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த நரசிம்மராவ், அந்த சட்டமன்றத் தேர்தலிலே என்ன முடிவெடுப்பதுஎன்பதை அறிவிக்காமல் இருந்தார். மூப்பனரும், அவருடைய நண்பர்களும் என்ன முடிவு என்பதை அறிந்து கொள்ள டெல்லிக்குசென்றனர்.
கடைசியாக நரசிம்மராவ் அ.தி.மு.க.வோடு கூட்டணி என்று அறிவித்தவுடன் மூப்பனாரும், அவருடைய நண்பர்களும் மிகுந்தவேதனையோடு சென்னைக்கு திரும்பி, அன்றைக்கே பெரும் புரட்சியை தொடங்கினார்கள்.
அது எத்தகைய புரட்சி என்பது உங்களுக்கு தெரியும். நரசிம்மராவை எந்தளவிற்கு விமர்சித்தார்கள். எந்த அளவிற்கு தாக்கிபேசினார்கள். ஒரு லஞ்ச அவதாரத்தோடு ஊழல் மகாராணியோடு எப்படிச் சேர்ந்து தேர்தலை நடத்துவது என்று கேள்வி எழுப்பிவெறும் வார்த்தையோடு நில்லாமல், நரசிம்மராவ் படத்தையெல்லாம் நெருப்பு வைத்து கொளுத்தினார்கள். அவருடையகட்அவுட்டுகளுக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.
இவ்வளவும் ஜெயலலிதாவை ஆதரித்தார் என்பதற்காகச் செய்யப்பட்ட காரியங்கள். இன்றைக்கு அதே ஜெயலலிதாவோடு கூட்டுசேர்ந்து கொண்டு தேர்தலில் நிற்கப் போகிறார்கள் என்றால், ஒரு முறை அவர்களையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நரசிம்மராவுக்கு என்ன செய்தோமோ அவை எல்லாம் நமக்கும் நடப்பதைப் போன்ற ஒரு கற்பனை அவர்களுக்கு வரவேண்டும்என்று கருதுகிறேன். அப்படி நடக்கக் கூடாது. ஆனால், அந்த நினைவு வரவேண்டும்.
பொதுவாகவே காங்கிரஸ் என்றாலே அதற்கொரு கலாச்சாரம் உண்டு. நன்றி மறக்கின்ற கலாச்சாரம். அது காங்கிரஸ் கட்சியின்பூர்வீகக் கலாச்சாரம். நீங்கள் தமாகாவிலிருந்து மட்டும் மீண்டு வரவில்லை. அந்த கலாசாரத்திலிருந்தும் நீங்கள் மீண்டுவந்திருக்கிறீர்கள் என்றார்முதல்வர்.












Click it and Unblock the Notifications