மேற்கு வங்க வெள்ளச் சாவு 1000 ஆனது
கல்கத்தா:
மேற்கு வங்கத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது. தலைநகர் கல்கத்தா உள்பட பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல்பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் தடைபட்டுள்ளது.
முர்ஷிதாபாத் நகரில் மட்டும் 500 பேரும், பிர்பாம் மாவட்டத்தில் 300 பேரும் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.
துணை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கூறுகையில், இதுவரை 435 பேர் பலியாகியுள்ளனர். 217 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை வெள்ளம்அடித்துச் சென்றிருக்கலாம் என்றார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கன்டி, நாவ்டா, சுட்டி, பாகபங்கோலா, டாமகோல் பகுதிகளும், நய்டா மாவட்டத்தில் நகாஷிபாரா, சாந்திப்பூர்,கிருஷ்ணாகஞ்ச், ஹன்சகாலி பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications