பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ரூ.5 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் ஊழியர்களைத் தாக்கி ரூ 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை பூந்தமல்லி அருகே பாப்பான்சத்திரத்தில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை ரூ 4.82 லட்சம் ரொக்கம்வசூலானது.
வங்கி ஊழியர்கள் வீரப்பன் மற்றும் குமார் இருவரும் வசூலான தொகை மற்றும் ரூ 21 ஆயிரத்துக்கான காசோலையை எடுத்துக் கொண்டுமோட்டார்சைக்கிளில் சென்றனர்.
அவர்களது மோட்டார்சைக்கிள் செம்பரம்பாக்கம் பொறியியல் கல்லூரி அருகே சென்ற போது இன்னொரு மோட்டார்சைக்கிளில் வந்த கும்பல்உருட்டுக் கட்டையால் அவர்களைத் தாக்கி, பணத்தையும், காசோலையையும் பறித்துக் கொண்டு தப்பித்துச் சென்று விட்டது.
போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications