தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்தால் .. தமிழ்க்குடிமகன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்தால் அதுகுறித்து புகார் செய்யலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.

திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட ஆட்சி மொழிக்கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களிடையே ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்ற போலித்தனம் உள்ளது. தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு, தாய்மொழிதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணை வந்தது. அந்த ஆணை ஆங்கிலத்தில்தான் வந்தது.அதன்பிறகு இந்தத் துறை தனியாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.

நீங்கள் கோவிலுக்குச் செல்லும்போது தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லி கேளுங்கள். அவர்கள் மறுத்தால் என்னிடம் கூறுங்கள். நான் நடவடிக்கைஎடுக்கிறேன்.

தாய்மொழிக்கு வருங்காலம் உண்டா என்று கேட்கிறார்கள். விஞ்ஞானி அப்துல் கலாம் தமிழ்நாட்டுக்காரர். அவர் ஆரம்பக் கல்வியைத் தமிழில் தான்படித்தார். தமிழில் படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற முடியாது என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு.

அன்பும், மனிதநேயமும் உள்ள தாயை எவ்வளவு நேசிக்கிறோமோ அதே அளவு தாய்மொழியையும் நேசிக்க வேண்டும் என்றார் தமிழ்க்குடிமகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+