For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோட்டா ராஜன் தாய்லாந்து நீதிமன்றத்தில் ஆஜர்

By Staff
Google Oneindia Tamil News

பாங்காக்:

சில வாரங்களுக்கு முன் தாய்லாந்தில் துபபாக்கியால் சுடப்பட்ட மும்பை தாதா சோட்டா ராஜன் வியாழக்கிழமை பாங்காக்நீதிமன்றத்திற்கு வீல் சேரில் கொண்டு வரப்பட்டார்.

அவரை துபாயில் தலைமறைவாக வாழந்து வரும் தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த சோட்டா ஷக்கீலின் ஆட்கள் ஒருஅடுக்குமாடிக் கட்டடத்தில் வைத்து சுட்டனர். பாங்காக்கில் நடந்த இந்த இதிய தாதாக்களின் துப்பாக்கி சண்டை அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுவிட்டு அந்தக் கும்பல் ஓடிவிட்டது. ஆனால், ராஜன் பலத்த காயத்துடன் தப்பிவிட்டார். இந்தத் தாக்குதலில் ராஜனின்கூட்டாளி வர்மன் இறந்தார். வர்மனின் மனைவி பலத்த காயமடைந்தார்.

ஆனால், தன் மீது நடந்த தாக்குதல் குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க ராஜன் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார்.தாய்லாந்து கமாண்டோக்களும் போலீசாரும் ராஜனின் பாதுகாப்பு வந்திருந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக தாவூத் இப்ராகிம்-சோட்டா ஷக்கீல் கும்பலைச் சேர்ந்த 3 பாகிஸ்தானியர்களும் ஒரு தாய்லாந்துநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோட்டா ராஜனை இந்தியாவுக்குத் திரும்ப அனுமதிப்பதா இல்லையா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X