பத்ரகாளிக்கு நள்ளிரவில் ஜெயா, சசிகலா பூஜை
தஞ்சாவூர்:
ஜெயலலிதாவும் சசிகலாவும் பத்ரகாளிக்கு நள்ளிரவில் பூஜை நடத்தினர்.
கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரித்தியங்கரா தேவி ஆலயத்தில் (ஸ்ரீ காளிஅம்மன் ஆலயம்)நள்ளிரவில் இந்தப் பூஜையை நடத்தினர். இரு தினங்களுக்கு முன் இந்தப் பூஜை நடந்தது.
அதர்வண பத்ரகாளி என அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு நள்ளிரவில் ஜெயலலிதா, நிகும்பலா யாகம்நடத்தினார். இந்த யாகம் நடத்துவதால் இன்னல்கள் விலகும் என்பது நம்பிக்கை.
கடந்த ஜூன் மாதத்திலும் ஜெயலலிதாவும் சசிகலாவும் இந்தக் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தது.
முன்னதாக தஞ்சாவூர் அருகே உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் கோவிலுக்கு இவர்கள் சென்று பூஜைகள் செய்தனர்.பின்னர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்குச் சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்தனர். இந்தக்கோவிலில் உள காத்த விநாயகருக்கும், ஆபத்சகாயேஸ்வரருக்கும், ஏலவார் குழலி அம்மனுக்கும் ஜெயலலிதாசிறப்புப் பூஜைகள் செய்தார்.
மறு தினம் மன்னார்குடி அருகே உளள திருராமேஸ்வரம் கோவிலுக்கு அதிகாலை 5 மணிக்குச் சென்று ராமநாதசுவாமியை வழிபட்டார்.