ஓய்வு பெறுகிறார் இந்திய ராணுவத் தளபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மல்லிக் சனிக்கிழமை ஓய்வு பெறுகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக இவர் தளபதியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் தான் கார்கிலில் பபிகஸ்தானியப்படைகள் ஊடுருவின. பின்னர் அந்தப் படைகளை இந்திய ராணுவம் அடித்துத் துரத்தியது.
சீக் லைட் இன்பாண்ட்ரி படைப் பிரிவில் பணியாற்றிய மாலிக் நாட்டின் 19வது ராணுவத் தளபதியாகநியமிக்கப்பட்டார். 1959ல் ராணுவத்தில் சேர்ந்த இவர் 1962ல் நடந்த இந்திய-சீனப் போரில் லடாக் பகுதியில்போரிட்டவர்.
பஞ்சாப், ஜம்மூ-காஷ்மீர், நாகாலாந்தில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்ட பல்வேறு படைகளுக்கு தலைமைதாங்கியுள்ளார். ராணுவத்தில் கம்ப்யூட்டரின் உபயோகத்தை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். ராணுவத்தில்அதிக ஆள் சேர்ப்பையும் குறைத்து அந்தப் பணத்தைக் கொண்டு நவீன ஆயுதங்கள வாங்க வழி வகுத்தவர்.












Click it and Unblock the Notifications