நெய்வேலி சுரங்க என்ஜீனியர் வீட்டில் சி.பி.ஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி:
ரெயில் பாதை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக நெய்வேலி நிலக்கரி சுரங்க என்ஜினியர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனைநடத்தினார்கள்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே இருந்து நெய்வேலி ரயில் நிலையம் வரை ரயில் பாதை அமைப்பதற்கு தரம் குறைவான பொருட்களை பயன்படுத்தியதால் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரூபாய் 54 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்துநிலக்கரி சுரங்க என்ஜினியர் ஒருவர் மீதும் காண்டிராக்டர் ஒருவர் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நெய்வேலியில் உள்ள இன்ஜினியர் மற்றும் காண்டிராக்டர் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சில முக்கியஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications