மாறி விட்டார் மாயாவதி!
லக்னோ:
முன்னாள் உத்திரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் தோற்றமும் அவரது அரசியல்செயல்பாடும் வியத்தகு முறையில் மாறியுள்ளன.
தற்போது மாயாவதியைப் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அவர் தனதுமுடியை ஆண்களை போல் மாற்றியிருப்பது குறித்துதான். 1980- களில் எண்ணெய்தடவி படிய தலைசீவியிருந்தார். 1990-களில் குதிரைவால் கொண்டைபோட்டிருந்தார். ஆனால் இப்போது ஆண்கள் போல் முடி வெட்டிக் கொண்டுள்ளார்.
42 வயதான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி தனது முந்தைய அரசியல் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அவரது பேசும் வழக்கங்களிலும்பெரும் மாறுதல் தெரிகிறது. கோபமாக பேசும் வழக்கமுள்ள அவர் இப்போது மிகவும்மென்மையாக பேசுகிறார்.
முடியை குறைவாக வைத்துக் கொண்டிருப்பது வசதிக்காகத்தான். முடி அதிகமாகஇருந்தால் அதை பராமரிக்க அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதாகக் கூறுகிறார்மாயாவதி.
இவை எல்லாவற்றையும் விட கோபமாக, பெருங்குரலுடன் பேசி வந்த மாயாவதிதற்போது மென்மையகாப் பேசுவது நிருபர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.