அமாவாசை இரவைப் பயன்படுத்தி தப்பினேன் .. நாகப்பா

Subscribe to Oneindia Tamil

சாம்ராஜ் நகர்:

அமாவாசை இரவைப் பயன்படுத்தி வீரப்பன் கும்பலிடமிருந்து தப்பி வந்தேன் என்றுசினிமா டைரக்டர் நாகப்பா கூறியுள்ளார்.

வீரப்பன் கும்பலிடமிருந்து நாகப்பா வியாழக்கிழமை மாலை தப்பி வந்து ராஜ்குமாரின்பூர்வீக கிராமமான தொட்டகாஜனூருக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து அவர் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டார்.

நாகப்பா சாம்ராஜ் நகர் காவல் நிலையத்தில் இருக்கும் விஷயம் அறிந்ததும்,வெள்ளிக்கிழமை காலை பத்திரிகை நிருபர்கள் காவல் நிலையம் விரைந்தனர்.நாகப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால் அதற்குப்போலீஸார் மறுப்புத் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்கள் அனைவரும்காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பிறகு சிறிது நேரத்திற்குப் பிறகு நாகப்பாவை செய்தியாளர்கள் சந்திக்க அனுமதிகொடுக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பிறகு நாகப்பா பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் அழுகையுடன்கூடிய குரலை ரேடியோவில் கேட்டதில் இருந்தே என்னால் அங்கு இருக்கமுடியவில்லை. எப்படியாவது தப்ப முடிவு எடுத்தேன்.

புதன்கிழமை அமாவாசையாதலால் அன்று இரவு வீரப்பன் கும்பல் பூஜைகள்நடத்தியது. அப்போது இருந்த அடர்ந்த இரவைப் பயன்படுத்தி நான் தப்பி வந்துவிட்டேன்.

தமிழ்த் தீவிரவாதி மாறன் என்ற ஒருவர் இருப்பதே எனக்குத் தெரியாது.அவர்களிடமிருந்து நாங்கள் பிரித்தே வைக்கப்பட்டிருந்தோம்.

நான் தப்பி வந்து விட்டதால் நடிகர் ராஜ்குமார் விடுதலையில் பிரச்சினை ஏற்படாது.

கடந்த 60 நாட்களும் நாங்கள் காட்டுக்குள் நடந்து கொண்டே இருந்தோம்.அனைவரும் சேர்ந்து மொத்தம் 150 கிலோமீட்டருக்கு மேல் நடந்திருப்போம் என்றார்நாகப்பா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+