7 நவாஸ் கட்சித் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த 7 பேருக்கு ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனையும், ரூ 5000 அபராதமும் விதித்து பாகிஸ்தான்உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1997-ம் ஆண்டு செப்டம்பர் 28 ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நுழைந்து ரகளை செய்தது தொடர்பாக இவர்களுக்கு, நீதிபதி ரஷீத் ஹாசன் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தார்.
விமானக்கடத்தல், கொலை முயற்சி போன்ற தேசதுரோக வழக்குகளில் சம்பந்தப்பட்டது தொடர்பாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு விசாரணைக்கு வந்த போது முக்கிய சாட்சிகள் மற்றும் வீடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டஆதாரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
விசாரணை அப்போதைய முதன்மை நீதிபதி சாஜாத் அலி ஷா தலைமையில் நடந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச்சேர்ந்த 7 பேர் மற்றும் லாகூரிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் நீதிமன்றத்துக்குள் நுழைந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கிலிருந்து இவர்களை டிவிஷன் பெஞ்ச் விடுதலை செய்ததது.
ஆனால் அதே நேரம் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் மீது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்புக் கூறப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications