For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறைக் கும்பலை ஆதரிக்கிறார் மூப்பனார் ..ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்க ளின் பிரச்சனைக்காக பாட்டாளி மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது என்று கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் நெல்லையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எஸ்.டி.டி.பூத்துக்கள், டைப்ரைட்டிங் சென்டர்களில் படித்த பெண்களை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் கொடுத்துவருகிறார்கள்.

இதை அரசு கட்டுப்படுத்தி அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க உதவி செய்ய வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

கடந்த 17 ம் தேதி புதுவை அபிஷேகப்பாக்கத்தில் என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசுஉத்தரவிட வேண்டும். அமைதியாக இருக்கிற வடதமிழகத்தை கலவர பூமியாக மாற்ற இந்த வன்முறைக் கும்பல் முயன்று வருகிறது.இந்த வன்முறைக்கும்பலுக்கு ஆதரவு அளித்தவர் மூப்பனார். ஒரு நாள் இந்தக் கும்பல் அவரையும் தாக்கும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை போக்குவதற்காக பாமக கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டமக்களை இணைப்பதற்காகவும் பாமக போராடி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. தவிர்க்க முடியாதவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X